Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் சாமி தொடுத்த வழக்கில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத் தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்!

அரவிந்த்சாமி
vinoth
செவ்வாய், 18 ஜூன் 2024 (09:22 IST)
மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படம் தமிழில் அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை முருகன் குமார் என்பவர் தயாரித்திருந்தார்.

இந்த படத்துக்காக அரவிந்த் சாமிக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்ட நிலையில் 30 லட்ச ரூபாய் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரிலீஸின் போது அவரிடமே முருகன் 35 லட்சம் ரூபாய் கடனும் வாங்கியுள்ளார். ஆனால் படம் ரிலீஸான பின்னரும் இந்த பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. மேலும் அரவிந்த் சாமி சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையையும் வருமான வரித்துறைக்கு அவர் செலுத்தவில்லை.

இது சம்மந்தமாக அரவிந்த் சாமி தொடுத்த வழக்கில் முருகன் குமார் தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் அதை செய்யாமல் காலதாமதம் ஆக்கியதால் நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முருகனின் வழக்கறிஞர் அவரிடம் சொத்துகள் எதுவும் இல்லை என வாதாட, அப்படியானால் அவர் தான் திவாலாகி விட்டதாக அறிவிக்கலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments