Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Siva
புதன், 10 ஏப்ரல் 2024 (14:32 IST)
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் 19ம் தேதி விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அன்று அரசு விடுமுறை என்றும் தனியார் நிறுவனங்களும் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது

இதனை அடுத்து அன்றைய தினம் திரையரங்குகள் காட்சிகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ’

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments