Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோசைக்கல்லை வீசி இயக்குநரின் நெற்றியை தாக்கிய அஞ்சலி

தோசைக்கல்லை வீசி இயக்குநரின் நெற்றியை தாக்கிய அஞ்சலி
, திங்கள், 23 ஜூலை 2018 (11:11 IST)
ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லிசா’. இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெர்று வருகிறது. இதில் கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். அவர் தோசைக் கல்லை தூக்கி எறிந்து இயக்குநரின் நெற்றியை காயப்படுத்தியிருக்கிறார்.
அஞ்சலி தற்போது ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் ‘லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். பிரபல ஒளிப்பதிவாளரும், ‘மதுரை வீரன்’ படத்தின் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம், இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், சமீபத்தில் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு காட்சிப்படுத்தியது. அந்த காட்சியில் அஞ்சலி, தோசைக்கல்லை கேமராவை நோக்கி வீச வேண்டும். ஆனால், அஞ்சலி வீசிய தோசைக்கல் நேராக இயக்குநர் ராஜூ விஸ்வநாத்தின் நெற்றியை தாக்கி ரத்தக்  காயத்தை ஏற்படுத்தியது. இதில் அவரது கண் அருகே புருவம் கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இயக்குநருக்கு நெற்றியில் தையல் போடப்பட்டது. இதனால் அன்று ஒருநாள் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க கேட்க வேண்டிய அவசியம் இல்லை: டேனியலுக்கு பல்பு கொடுத்த பொன்னம்பலம்