Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 வருடங்களுக்குப் பிறகு அஞ்சலி நடிக்கும் படம்

6 வருடங்களுக்குப் பிறகு அஞ்சலி நடிக்கும் படம்
, செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (09:37 IST)
6 வருடங்கள் கழித்து மலையாளப் படமொன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அஞ்சலி.


 

 
ஒரு வருடத்துக்குப் பிறகு அஞ்சலி நடித்த ‘தரமணி’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. அடுத்ததாக, ஜெய் ஜோடியாக நடித்த ‘பலூன்’ ரிலீஸாக இருக்கிறது. ஒரு வருடத்துக்குப் பிறகு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸாவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அஞ்சலி.
 
அத்துடன், இன்னொரு மகிழ்ச்சியும் இணைந்திருக்கிறது. பிஜு மேனன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘ரோசாப்பூ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 6 வருடங்களுக்கு முன்பு ஜெயசூர்யா ஜோடியாக ‘பியான்ஸ்’ என்ற படத்தில் நடித்தார் அஞ்சலி. அதன்பிறகு மலையாளத்தில் தலைகாட்டாத அஞ்சலி, தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மலையாளப் பக்கம் கரை ஒதுங்கியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது திருமணம் கண்டிப்பாக உண்டு: அமலாபால்