Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்கு பின் தனுஷூக்கு குரல் கொடுத்த அனிருத்!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (22:43 IST)
கடந்த சில ஆண்டுகளாக அனிருத் மட்டும் தனுஷ் இணையாக காரணத்தினால் வேலையில்லா பட்டதாரி மற்றும் மாரி ஆகிய படங்களில் கேட்ட பாடல்களை ரசிகர்கள் கேட்க முடியாத நிலை உள்ளது. இதனால் மீண்டும் அனிருத் மற்றும் தனுஷ் எப்போது இணைவார்கள் என இரு தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்
 
இதனை அடுத்து சமீபத்தில் பேட்டியளித்த அனிருத் மீண்டும் தனுஷுடன் இணைந்து பணிபுரிவேன் என்று கூறியது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இதன் முதல் கட்டமாக தற்போது தனுஷ் நடித்த படம் ஒன்றுக்கு அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். இதனை அடுத்து விரைவில் அவர் தனுஷ் படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை அனிருத் பாடி உள்ளதாகவும் இந்த பாடல் வரும் 25-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தனுஷ் மற்றும் அனிருத் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments