பிரபல இசையமைப்பாளர் அனிருத், தனது இசையமைப்பு பணிகளில் சில சமயங்களில் ஏற்படும் சிந்தனை தடையை கடக்க, சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியை நாடுவதாக வெளிப்படையாகக் கூறியுள்ளது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அனிருத், "ஒரு பாடலில் இரண்டு வரிகளுக்கு மேல் என்னால் சிந்திக்க முடியாமல் தவித்தேன். அப்போது, வேறு வழியின்றி சாட்ஜிபிடி-யின் உதவியை நாடினேன். சாட்ஜிபிடி-யிடம் சில ஐடியாக்களை கேட்டபோது, அது சில பரிந்துரைகளை கொடுத்ததாகவும், அதில் தனக்கு உகந்த ஒரு சிந்தனையை எடுத்துக்கொண்டு, பாடலை நிறைவு செய்ததாகவும் அவர் கூறினார்.
"இன்றைய தேதியில், படைப்பாற்றல் மிக்க ஒருவருக்கு சிந்தனை தடை ஏற்படும்போது, அதிலிருந்து மீள சாட்ஜிபிடி ஒரு சிறந்த கருவியாக இருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனிருத்தின் இந்த பேச்சு, இசையமைப்பு போன்ற கலைத்துறையிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துள்ளதை உறுதிசெய்கிறது. இது ஒருபுறம் ஆச்சரியத்தையும், மறுபுறம் நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் காட்டுகிறது.