Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேடையில் ஆட சொன்ன ரசிகர்கள்…. கடுப்பாகி வெளியேறிய ஆண்ட்ரியா!

மேடையில் ஆட சொன்ன ரசிகர்கள்…. கடுப்பாகி வெளியேறிய ஆண்ட்ரியா!
, ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (08:52 IST)
நடிகை ஆண்ட்ரியா சேலத்தில் உள்ள ஒரு கோயில் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில் சேலத்தில் உள்ள ஒரு கோயில் நிகழ்ச்சியில் ஒரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள சென்றுள்ளார். அப்போது மேடையில் பேசிய அவரை நடனமாட சொல்லி ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதை மறுத்த ஆண்ட்ரியா பாடல் பாடியுள்ளார். மீண்டும் மீண்டும் ரசிகர்கள் ஆட சொல்லி கேட்க ஆண்ட்ரியா அதிருப்தியாகி மேடையில் இருந்து கீழிறங்கி சென்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிரத்னம் & எஸ் எஸ் ராஜமௌலி வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜின் புதிய பாடல்!