இரண்டு படங்கள் வெளிவரும்வரை, எது கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் நடிகைகள், அதன் பிறகு விஷம் போல சம்பளத்தை ஏற்றுவது வாடிக்கை. கயல் ஆனந்தியும் இந்த வாடிக்கையில் இணைந்திருக்கிறார்.
கயல் படத்தில் அறிமுகமான ஆனந்தி இதுவரை பத்து முதல் பதினைந்து லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். இப்போது தனது சம்பளத்தை 25 முதல் 30 லட்சங்களாக உயர்த்தியுள்ளார்.
மன்னர் வகையறா, ரூபாய், பண்டிகை ஆகிய படங்கள் ஆனந்தி நடிப்பில் வெளியாக உள்ளன. சம்பளத்தை உயர்த்தியதால் வாய்ப்புகள் வருவது குறைந்திருக்கிறது.
நடிகர்கள் நாலு படம் நடித்ததும் கோடிகளில் சம்பளம் கேட்கையில் ஆனந்தி லட்சங்களில்தான் இன்னும் தொடர்கிறார்.