Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘நாகேஷ் திரையரங்கம்’ மீது வழக்கு

‘நாகேஷ் திரையரங்கம்’ மீது வழக்கு
, திங்கள், 3 ஜூலை 2017 (12:28 IST)
‘நாகேஷ் திரையரங்கம்’ மீது நடிகர் ஆனந்த் பாபு வழக்கு தொடர்ந்துள்ளார்.



 
ஆரி, ஆஷ்னா ஜவேரி நடித்து, ரஜினிகாந்த் டீஸர் வெளியிட்ட 'நாகேஷ் திரையரங்கம்' படத்திற்கு தடை கோரி, நாகேஷ் மகன் ஆனந்த் பாபு வழக்கு தொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் குடுத்துள்ள மனுவில், "1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எனது தந்தை நாகேஷ், தியாகராய நகரில் சொந்தமாக ஒரு திரையரங்கம் கட்டியிருந்தார். எங்களிடம் எந்தவித முறையான அனுமதியும் பெறாமல், இந்தப் படத்திற்கு இவர்கள் பெயர் வைத்துள்ளது, அப்பா நாகேஷ் அவர்களை இழிவு செய்யும் விதமாக இருக்கிறது. இதனால், இந்தப் படத்தைத் தடைசெய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இவர் வழக்கு தொடுத்ததைத் தொடர்ந்து, 'நாகேஷ் திரையரங்கம்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த அவமதிப்புக்காக படக்குழுவிடம் இருந்து ஆனந்த் பாபு 50 லட்சம் கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறந்த எண்டெர்டெய்னர் விருதுபெற்ற விஜய்