Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை பாலியல் கொடுமை செய்து கொன்று விடுவார்களோ என பயந்தேன் – விஜய் பட நடிகை புகார்!

என்னை பாலியல் கொடுமை செய்து கொன்று விடுவார்களோ என பயந்தேன் – விஜய் பட நடிகை புகார்!
, வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:15 IST)
நடிகை அமிஷா படேல் தன்னை தேர்தல் பிரச்சாரத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த பிரகாஷ் சந்திரா மீது புகார் கூறியுள்ளார்.

நடிகை விஜய்யோடு புதிய கீதை படத்தில் நடித்தவர் அமிஷா படேல். இவர் நிறைய பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் தற்போது நடந்த பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த பிரகாஷ் சந்திராவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் மும்பைக்கு வந்துள்ள அவர் பிரகாஷ் மேல் புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.

அதில் ‘என்னை பிரச்சாரத்துக்கு அழைத்துச் சென்று ஒரு அடிமை போல நடத்தினர். எனது காரைச் சுற்றி அடியாட்களை நிறுத்தினர். பிரகாஷைப் பற்றி புகழ்ந்து பேச வேண்டும் என்று எனக்குக் குறும்செய்தி அனுப்பினார். எனக்கு என்னை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது. அதனால் அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தேன். மும்பைக்கு திரும்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் படத்தில் இருந்து முருகதாஸ் விலகக் காரணம் இதுதானாம்! வச்சி செய்துள்ள சன் பிக்சர்ஸ்!