Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமூக வலைதளங்களில் அமலாபாலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

சமூக வலைதளங்களில் அமலாபாலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!
, வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (12:07 IST)
அமலாபால் விஜயை பிரிந்த பிறகு நானும், விஜய்யும் வேறு வேறு நிலையில் உள்ளோம். இரண்டு அழகான நபர்கள் தவறான  கதையில் சந்தித்துக் கொண்டதாகிவிட்டது. எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது. இன்னும் அவர் தான் எனக்கு  பிடித்த நபர் என்று அமலா கூறியிருந்தார்.

 
அமலா பால் கணவர் விஜய்யை பிரிந்த பிறகு மாடர்னாக உடை அணிந்து வருகிறார். குட்டி குட்டியான உடையில் அவர்  எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளானார். தன்னை விமர்சித்தவர்களுக்கு  பதிலடியும் கொடுத்தார்.
 
அமலா தனது நெருங்கிய நண்பரான அஜீத் நாயர் என்பவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் திருமண  மாப்பிள்ளையை கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தையும் அமலா இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுள்ளார்.
 
இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்து அவரை கழுவி ஊற்றி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.  விவாகரத்திற்கு பிறகு ரொம்பவே ஃப்ரீ, ஜாலியா இரும்மா. நல்லா வருவம்மா. விஜய்க்கு அமலா தேவையில்லை. சிலர்  சொல்ல முடியாத வார்த்தையால் திட்டியும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொளஞ்சி இசை