Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமலாபா அளித்த புகார்- பவீந்தர் சிங்குக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

amala paul bhavninder
Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (17:00 IST)
பிரபல தமிழ் நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது நண்பர் கைது செய்யப்பட்ட  நிலையில் அவருக்கு இன்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தமிழில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் அமலா பால். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான “மைனா” படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் தெய்வத்திருமகள், தலைவா, சேட்டை என பல படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்த இவர் சில ஆண்டுகள் கழித்து விவகாரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து படங்கள் நடித்து வரும் அமலா பால்  சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள ஆரோவில் என்ற பகுதியில் உள்ள வீட்டில் அமலா பால் தங்கியிருந்தபோது அவரது நண்பரான ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங் என்பவர் அமலா பாலுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அமலா பால் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் போலீஸார் பவீந்தர் சிங்கை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  அமலாபாலை ஏமாற்றிய புகாரின் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் பவீந்தர் சிங்கிற்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

அதாவது,  அமலாபாலும் பவீந்தர் சிங்கும் பதிவுத் திருமணம் செய்து, குடும்பம் நடத்தியது தொடர்பான ஆதாரங்களை  பவீந்தர் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்