Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா 2 பார்க்க சென்று இறந்த பெண் குடும்பத்துக்கு 25 லட்சம் நிதியுதவி… அல்லு அர்ஜுன் அறிவிப்பு!

vinoth
சனி, 7 டிசம்பர் 2024 (08:01 IST)
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் ஃபஹத் பாசில்  உள்ளிட்ட பலர் நடித்து கடந்த வியாழக்கிழமை ரிலீஸான படம் ‘புஷ்பா 2’. இந்த படத்தின் முதல் பாகம் பெரும் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் நாளில் மட்டும் 294 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய சினிமாவிலேயே எந்தவொரு படமும் படைக்காத சாதனையைப் படைத்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்க பெண் ஒருவர் தனது 9 வயது மகனுடன் சென்றுள்ளார். அந்த சமயம் திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வருவதாக தகவல் வெளியானதும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதில் சிக்கி பெண் பரிதாபமாக பலியான நிலையில், 9 வயது மகன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு தன் சார்பாக 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிப்பதாகவும் தங்கள் குழு சார்பாக எந்த விதமான உதவி வேண்டுமானால் செய்ய தயாராக இருப்பதாகவும் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments