Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜூவை ரவுண்டு கட்டி நாமினேட் செய்த போட்டியாளர்கள் - ஆனால் மக்கள் ஆதரவு பிரியங்காவுக்கு தான்!

ராஜூவை ரவுண்டு கட்டி நாமினேட் செய்த போட்டியாளர்கள் - ஆனால் மக்கள் ஆதரவு பிரியங்காவுக்கு தான்!
, திங்கள், 8 நவம்பர் 2021 (14:20 IST)
பிக்பாஸ் வீட்டில் நியமாகவும், தைரியமாகவும் விளையாடி ஸ்ருதி நேற்று வீட்டை விட்டு விக்ஷனில் வெளியேறினார். அவர் வெளியேறியதற்கு முக்கிய காரணம் அந்த நாணயம் தான். இருந்தும் அவரை வெளியேறியது நியாயமில்லை என ஆடியன்ஸ் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான தலைவர் போட்டிக்கு ஆள் தேர்வு இன்று நடைபெற்றது. அதற்காக செண்பகமே செண்பகமே டாஸ்க்கில் வெற்றி பெற்ற அணியில் இருந்த 7 பேரும் இந்த வார கேப்டன் போட்டிக்கு நேரடியாக தேர்வானார்கள்.
 
அதில் பாவனி வருண், பிரியங்கா, அக்ஷ்ரா, அபிநய், நீருப் ஆகியோரது புகைப்படங்கள் பொம்மைகளாக வைக்கப்பட்டு பொம்மலாட்டம் டாஸ்க் ஐந்தில் எந்த நபர் தலைவர் ஆகக்கூடாது என நினைக்கிறீர்கள் அவர்கள் தலையை உடைக்கலாம் என கூற சிபி முதல் ஆளாக அக்ஷரா தலையை உடைத்துவிட்டார்.
 
அதையடுத்து வெளியான ப்ரோமோவில் வீட்டில் உள்ள பெரும்பாலானோர் ராஜூவை நாமினேட் செய்தனர். ராஜு மற்றும் அண்ணாச்சி மட்டும் பிரியங்காவை நாமினேட் செய்து அதற்கான காரணத்தை கூறினர். இதில் ட்விஸ்ட் என்னவென்றால் மக்கள் அனைவரும் ராஜு மற்றும் பிரியங்காவுக்கு தான் ஆதரவு கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தர்வு