Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே இடத்தில் ரஜினி & அஜித் படங்களின் ஷூட்டிங்!

ஒரே இடத்தில் ரஜினி & அஜித் படங்களின் ஷூட்டிங்!
, வியாழன், 24 நவம்பர் 2022 (10:30 IST)
அஜித்தின் துணிவு திரைப்படமும், ரஜினியின் ஜெயிலர் திரைப்படமும் சென்னையில் ஒரே இடத்தில் ஷூட்டிங் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஆகிய இரண்டும் பொங்கல் திருநாளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது துணிவு படத்தை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது. புறநகர் பகுதிகளில் கூட பல திரையரங்குகள் பொங்கலுக்கு தங்கள் தியேட்டரில் துணிவு ரிலீஸ் ஆவதை உறுதி செய்துள்ளனர். ஆனால் வாரிசு படத்துக்கான திரையரங்கு ஒப்பந்த வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் துணிவு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது இறுதிக் காட்சிகள் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் படமாக்கப்படுகின்றன. இதே ஸ்டுடியோவில்தான் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங்கும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்னால் இருவரும் சந்தித்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழம்பெரும் இயக்குனரை சந்தித்த கமல்… வைரல் போட்டோஸ்!