Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடபழனியில் முகாமிட்ட அஜித் - நேர்கொண்ட பார்வை அப்டேட் !

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (13:50 IST)
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட  பார்வை  திரைப்படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார் அஜித்.

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை அடுத்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச் வினோத்துக்கே வாய்ப்பு அளித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் விஸ்வாசம் எனும் மெஹாஹிட் படத்தைக் கொடுத்த அஜித் அடுத்த ஏழு மாதத்தில் நேர்கொண்ட பார்வைப் படத்தை ரிலிஸ் செய்ய இருக்கிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிப்பில் ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகளான டப்பிங் பணிகள் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகின்றன். இதில் அஜித் தனது டப்பிங் பணிகளை இரவு நேரங்களில் வந்து பேசிச் செல்கிறாராம்.

நேர்கொண்ட பார்வை படத்தை சீனாவிலும் ரிலிஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாம் வாரத்தில் படுத்த கவினின் ஸ்டார் பட வசூல்!

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments