Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துப்பாக்கியுடன் மாஸாக நிற்கும் அஜித்… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!

துப்பாக்கியுடன் மாஸாக நிற்கும் அஜித்… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (14:44 IST)
நடிகர் அஜித்குமார் தற்போது ஹெச் வினோத் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில்  H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அஜித் ஐரோப்பாவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி முடித்தார்.

இதையடுத்து தற்போது அஜித் இந்தியா திரும்பியுள்ள நிலையில், அவர் காட்சிகளை படமாக்க வினோத் வெளிநாடுகளுக்கு லோகேஷன் பார்க்க சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது அஜித்தின் லேட்ட்ஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. கையில் துப்பாக்கியோடு நண்பர் ஒருவரோடு அஜித் இடம்பெற்றுள்ள அந்த புகைப்படம் டிவிட்டரில் அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் தோல்வி படங்கள்...சம்பளத்தை பாதியாகக் குறைந்த ரஜினி பட நடிகர்!