Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சாரிடம் கதை சொல்லப் போய் சொதப்பிவிட்டேன்… டிமாண்டி காலணி இயக்குனர் பகிர்ந்த தகவல்!

விஜய் சாரிடம் கதை சொல்லப் போய் சொதப்பிவிட்டேன்… டிமாண்டி காலணி இயக்குனர் பகிர்ந்த தகவல்!

vinoth

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (13:49 IST)
டிமாண்டி காலணி என்ற படத்தின் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. அதிலும் விக்ரம் நடிப்பில் அவர் இயக்கிய கோப்ரா படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தும் அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது.

இதையடுத்து டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி(நாளை) ரிலீஸ் ஆகிறது. இரண்டாம் பாகத்தில் அருள்நிதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மற்ற வேடங்களில் ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பேசியுள்ள இயக்குனர் அஜய் ஞானமுத்து “நான் விஜய் சாரிடம் கதை சொல்லப் போகும் நான் சொதப்பிவிட்டால் என்ன செய்வது என இன்னொருவரை அழைத்துப் போனேன். ஆனால் அவர் என்னைவிட அதிகமாக சொதப்பிவிட்டார். மறுமுறை நானே போனேன். விஜய் சாரிடம் கதை சொல்ல ஆரம்பித்ததும் சொதப்ப ஆரம்பித்துவிட்டேன். நான் சின்ன வயதில் இருந்தே அவரை ஆச்சர்யமாகப் பார்த்தவன். இப்படி கதை சொன்னால் எப்படி விஜய் சார் ஓகே பண்ணுவார்?” எனப் பதிலளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கலான் வெற்றிக்கு வாழ்த்திய கங்குவா சூர்யா!