Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரத நாட்டியத்தை அடுத்து பாட்டு பாடிய ஐஸ்வர்யா தனுஷ்

Webdunia
சனி, 10 மார்ச் 2018 (12:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், ஏற்கனவே மனைவி, அம்மா, இயக்குனர், என குடும்பம், தொழில் என இரண்டிலும் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று ஐநா சபையில் அவரது பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை ஐஸ்வர்யா தனுஷ் பெற்றார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசுகளில் ஒருவரான பவதாரிணி இசையில் ஐஸ்வர்யா தனுஷ், பெண்களின் பெருமையை கூறும் வகையிலான ஒரு பாடலை பாடியுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் கிண்டல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது பாடலுக்கு என்ன வகையான விமர்சனம் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments