Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தேசிய விருது என்பது இப்போது நகைச்சுவை ஆகிவிட்டது…” மூத்த இயக்குனர் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (09:12 IST)
இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான ஆடூர் கோபாலகிருஷ்ணன் தேசிய விருதுகள் பற்றிய தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மலையாள சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான ஜான் ஆபிரகாம் நினைவு விருது விழாவில் கோழிக்கோட்டில் நடைபெற்றது. அதில் மூத்த இயக்குனர் ஆடூர் கோபாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் இப்போதெல்லாம் தேசிய விருதுகள் என்பதே நகைச்சுவை ஆகிவிட்டது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் “முன்பெல்லாம் தேசிய விருது நடுவர்கள் கலைஞர்களாகவும், நல்ல விமர்சகர்களாகவும் இருந்தனர். ஆனால் இப்போதெல்லாம் யாரென்றே தெரியாத நடுவர்கள் குழுவில் உள்ளனர். அவர்கள் என்ன அளவுகோல்களை வைத்துள்ளார்கள் எனத் தெரியவில்லை. பெரிய வெற்றி பெற்ற படங்களுக்குதான் அவர்கள் விருது வழங்குகிறார்கள். அவர்களிடம் சிறந்த படங்களின் பட்டியல் கூட இல்லை. அவர்கள் சினிமாவை ஒரு பொழுதுபோக்காக கருதுகின்றனர். கேரள திரையுலகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்ப்டுகிறது. பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள்தான் நடுவர்களாக இருக்கின்றனர். ” என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments