Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் துன்புறுத்தல்: முதல்வரை சந்தித்து மனு அளித்தார் நடிகை வரலட்சுமி!

பாலியல் துன்புறுத்தல்: முதல்வரை சந்தித்து மனு அளித்தார் நடிகை வரலட்சுமி!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (11:05 IST)
பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்வர் எடப்பாடி பழனிச்சமியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.


 
 
கடந்த மார்ச் மாதம் சென்னையில் saveshakti என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தையும் தனது பிரசாரத்தையும் தொடங்கினார் நடிகை வரலட்சுமி. இந்த கையெழுத்து இயக்கத்தில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.
 
இதனை ஆரம்பிக்கும் போது மாநில அரசுக்கு ஒரு மனுவாக இந்த கையெழுத்து இயக்கத்தின் கோரிக்கையை கொடுக்க உள்ளதாக வரலட்சுமி கூறியிருந்தார். அதன் படி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது கோரிக்கை மனுவை வழங்கினார் நடிகை வரலட்சுமி.
 
முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வரலட்சுமி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்காக மகிளா நீதிமன்றங்கள் அதிகரிக்க வேண்டும். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அதுதொடர்பான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறினார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்