Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகருக்குப் பதிலடி கொடுத்த நடிகை வனிதா!

பிரபல நடிகருக்குப் பதிலடி கொடுத்த நடிகை வனிதா!
, புதன், 4 ஆகஸ்ட் 2021 (21:49 IST)
சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் நடந்துக்கொள்ளும் வனிதா அதன் மூலம் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்ட வனிதா அதன் பின்னர் திருமண சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், சமீபத்தில் ரம்யாகிருஷ்ணன் குறித்த விவகாரத்தில் விமர்சித்த நடிகர் நகுலுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக நடனமாடிக்கொண்டிருந்த வனிதா ரம்யா கிருஷ்ணன் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள நகுல், " வனிதாவிடம் இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் என்று தான் நாங்கள் சொன்னோம். ஆனால் வனிதா தான் வேறு விதமாக பேசினார். நான்கு நிமிட பாடலில் அவர் இரண்டு நிமிடம் சும்மாவே அமர்ந்துகொண்டு இருந்தார், எனவே அவர் ஆட தொடங்கும் போது அதிகம் எனர்ஜியோடு அம்மன் போல ஆடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்தது போல இல்லை. மற்றவர்களை ஒப்பிடும்போது அவரது performance சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

போட்டியில் ஒப்பிடாமல் எப்படி சொல்ல முடியும்? "நான் வீட்டுக்கு போன பிறகு வனிதா அசிங்கமாக பேசினார் என டீமில் இருப்பவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள், ரம்யா கிருஷ்ணனுக்கு எவ்ளோ பெயர் இருக்கிறது. அவரிடம் மன்னிப்பு கேட்டே ஆகணும்". அவங்களை பற்றி பேசவே நான் விரும்பவில்லை, சேற்றில் குதித்து என்னை நான் அசிங்கப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை" என நகுல் கூறியிருந்தார்.
webdunia

இதுகுறித்து தற்போது நடிகை வனிதா கூறியுள்ளதாவது: பிரச்சனை சம்பந்தப்பட்ட நாங்களே அமைதியாக இருக்கும்போது, வேறு ஒருவர் இதைப்பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார். 
webdunia

சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் நடந்துக்கொள்ளும் வனிதா அதன் மூலம் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்ட வனிதா அதன் பின்னர் திருமண சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், சமீபத்தில் ரம்யாகிருஷ்ணன் குறித்த விவகாரத்தில் விமர்சித்த நடிகர் நகுலுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக நடனமாடிக்கொண்டிருந்த வனிதா ரம்யா கிருஷ்ணன் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள நகுல், " வனிதாவிடம் இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் என்று தான் நாங்கள் சொன்னோம். ஆனால் வனிதா தான் வேறு விதமாக பேசினார். நான்கு நிமிட பாடலில் அவர் இரண்டு நிமிடம் சும்மாவே அமர்ந்துகொண்டு இருந்தார், எனவே அவர் ஆட தொடங்கும் போது அதிகம் எனர்ஜியோடு அம்மன் போல ஆடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்தது போல இல்லை. மற்றவர்களை ஒப்பிடும்போது அவரது performance சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

போட்டியில் ஒப்பிடாமல் எப்படி சொல்ல முடியும்? "நான் வீட்டுக்கு போன பிறகு வனிதா அசிங்கமாக பேசினார் என டீமில் இருப்பவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள், ரம்யா கிருஷ்ணனுக்கு எவ்ளோ பெயர் இருக்கிறது. அவரிடம் மன்னிப்பு கேட்டே ஆகணும்". அவங்களை பற்றி பேசவே நான் விரும்பவில்லை, சேற்றில் குதித்து என்னை நான் அசிங்கப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை" என நகுல் கூறியிருந்தார்.
இதுகுறித்து தற்போது நடிகை வனிதா கூறியுள்ளதாவது: பிரச்சனை சம்பந்தப்பட்ட நாங்களே அமைதியாக இருக்கும்போது, வேறு ஒருவர் இதைப்பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''பொன்னியின் செல்வன் ''பட அடுத்த லுக்...இணையதளத்தில் வைரல்