Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8 மாத கர்ப்பத்துடன் கடலுக்கடியில் போட்டோ ஷூட் நடத்திய சமீரா ரெட்டி!

Advertiesment
Sameera Reddy
, வியாழன், 4 ஜூலை 2019 (16:24 IST)
1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ  தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில்  துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு   கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமானார். 

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். 

 
பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் கவனித்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார். 


 
இந்நிலையில் சமீபநாட்களாக தான் கர்பமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் சமீரா ரெட்டி தற்போது கடலுக்கடியில் தண்ணீரில் மிதந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து அதனை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். சமீராவின் கியூட்டான இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மெகா வைரலாகி வருகிறது.


 
இந்த புகைப்பதை கண்ட அவரது ரசிகர்கள் பாதுகாப்பாக குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் வீட்டிலிருந்து விடைபெறுகிறார் வனிதா? - ப்ரோமோ!