Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ’டீப்ஃபேக் ’ வீடியோ பரப்பியர் கைது

Sinoj
சனி, 20 ஜனவரி 2024 (14:57 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ பரப்பியரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீத கோவிந்தம், தேவ்தாஸ், டியர் காம்ரேட், சுல்தான்,. புஷ்பா, வாரிசு, அனிமல் ஆகிய படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக உள்ளார்.

சமீபத்தில்,  ஏஐ தொழில் நுட்பத்தால் ஆபாசமாக உருவாக்கப்பட்ட தனது DeepFake Edit வீடியோ இணையதளத்தில் பரவியதை பார்த்த நடிகை ராஷ்மிகா வருத்தம் தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக சினிமா நடிகர்கள் கருத்து கூறி, இந்த டீப் ஃபேக் வீடியோவை வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து, மத்திய அரசு, இதுபோன்ற அவதூறு செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில் டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில் 4 பேரிடம் டெல்லி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், இன்று ராஷ்மிகா மந்தனாவை போன்ற பெண் உருவத்துடன் போலி வீடியோ உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பிய நபரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

நீச்சலுடை புகைப்படங்களை வெளியிட்ட பாபநாசம் புகழ் எஸ்தர் அனில்!

க்யூட் போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா லஷ்மி!

மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments