போதைப்பொருள் விவகாரம்: மேலும் ஒரு நடிகை கைது!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (07:58 IST)
போதைப்பொருள் விவகாரம்: மேலும் ஒரு நடிகை கைது!
கடந்த சில மாதங்களாக திரையுலகில் போதை பொருள் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கை எடுத்ததில் இதுவரை ரியோசக்கரவர்த்தி, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
மேலும் ஒரு சில நடிகைகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்பதும் அவர்களும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
பிரபல தொலைக்காட்சி நடிகை ப்ரீத்திகா சவுகான் என்பவரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகை ப்ரீத்திகா சவுகான் போதை பொருள் வாங்க முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு எதிராக கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்த கைது யார் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments