Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை கஸ்தூரி தலைமறைவு? சம்மனை வாங்க மறுத்து தப்பியோட்டமா?

Siva
ஞாயிறு, 10 நவம்பர் 2024 (10:08 IST)
நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாகவும், எழும்பூர் போலீசார் கொடுத்த சம்மனை வாங்க மறுத்து அவர் தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன் இந்து மக்கள் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது குற்றம் காட்டப்பட்டது. இதனை அடுத்து, அவர் மீது பல காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில், சென்னை எழும்பூர் போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தப்பி ஓடிவிட்டதாகவும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதால் மேலும் அவருக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
 
போலீசார் சம்மன் வழங்க கஸ்தூரி வீட்டிற்கு சென்ற போது, கஸ்தூரி பின்வாசல் வழியாக காரில் தப்பிச் சென்று விட்டதாகவும், இதனை அடுத்து அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டரை கொளுத்துனா.. தீயணைப்பு கருவி வைங்க! - தக் லைஃப் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது இதற்காகதான்… சிம்ரன் பகிர்ந்த தகவல்!

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!

கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவுள்ள சூர்யா?

அடுத்த கட்டுரையில்
Show comments