Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினிக்கு சகோதரியாக நடித்த பிரபல நடிகையின் கணவர் திடீர் தற்கொலை

ரஜினிக்கு சகோதரியாக நடித்த பிரபல நடிகையின் கணவர் திடீர் தற்கொலை
, செவ்வாய், 14 மார்ச் 2017 (21:18 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாண்டியன்' திரைப்படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்த ஜெயசுதா, பல படங்களில் நாயகியாகவும் குணசித்திர நடிகையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது கணவரும் பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் சகோதருமான நிதின்கபூர் சற்றுமுன்னர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



 


1995ஆம் ஆண்டு ஜெயசுதா-நிதின்கபூர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஷ்ரேயன், நிஹர் என்ற இருமகன்கள் உள்ளனர். பிரபல தயாரிப்பாளரான நிதின்கபூர் சமீபத்தில் தனது மகன் ஷ்ரேயன் நடித்த ஒரு படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது.

இந்த படம் உள்பட அவர் தயாரித்த வேறுசில படங்களும் தோல்வியை தழுவியதால் கடும் நிதி நெருக்கடி காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. நிதின்கபூரின் இறுதிச்சடங்கு மும்பையில் நாளை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒளிப்பதிவாளரை மாற்றிய கெளதம் மேனன்