Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையை மேடையில் அழ வைத்த டி.ராஜேந்தர்: நீ கட்டி வரவில்லை சாரி, இப்ப கேட்கிற சாரி!

நடிகையை மேடையில் அழ வைத்த டி.ராஜேந்தர்: நீ கட்டி வரவில்லை சாரி, இப்ப கேட்கிற சாரி!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (10:48 IST)
விழித்திரு படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராஜேந்தர், அந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை தன்ஷிகாவை மேடையிலேயே விமர்சித்து அழ வைத்தார்.


 
 
நடிகர்கள் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் விழித்திரு படத்தை எழுத்தாளர் மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
 
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை தன்ஷிகா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஆனால் டி.ராஜேந்தரின் பெயரை மட்டும் விட்டுவிட்டார். இதனையடுத்து பேச வந்தார் நடிகர் டி.ராஜேந்திரா.
 
அப்போது பேசிய அவர், நடிகை தன்ஷிகாவும் எனது பெயரை மறந்துவிட்டார். தன்ஷிகாவெல்லாம் என்னுடைய பெயரை சொல்லியா நான் வாழப்போகிறேன். ஹன்சிகாவை பற்றியே கவலைப்படாதவன் தன்ஷிகாவை பற்றியா கவலைப்பட போகிறேன். மேடை நாகரீக என்று ஒன்று உள்ளது என்றார்.
 
இதனையடுத்து நடிகை தன்ஷிகா டி.ராஜேந்தரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனாலும் விடாத ராஜேந்தர் நீ கட்டி வரவில்லை சாரி(சேலை) இப்ப கேட்கிற சாரி(மன்னிப்பு) என விமர்சனம் செய்தார். இதனால் நடிகை தன்ஷிகா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments