Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதையில் சீரழிக்க பார்த்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்

போதையில்  சீரழிக்க பார்த்தார்: பிரபல நடிகர் மீது நடிகை புகார்
, புதன், 27 பிப்ரவரி 2019 (08:39 IST)
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி. அவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.
 
தமிழ்திரையுலகில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சற்றுகாலம் யார் மீதும் எந்த குற்றச்சாட்டையும் வைக்காமல் இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர் கொரடாலா சிவா மீது பாலியல் புகார் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
webdunia

இந்நிலையில் மீண்டும் தற்பொழுது நடிகர் நானி மீது அதிர்ச்சி புகார் ஒன்றை கூறியுள்ளார். நானிக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்லை.  வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றிவிட்டார். எனது வீட்டிற்கு ஒருமுறை நன்றாக குடித்துவிட்டு கையில் மது பாட்டில்களுடன் வந்தார். மரியாதையாக சென்றுவிடுங்கள் என  நான் அவரை எச்சரித்து அனுப்பினேன் என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி, கமல் இதுக்காக நிச்சயம் சேரணும்: விஷால்