Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழற்றிவிட்ட காதலன்: தற்கொலை செய்து கொண்ட நடிகை யாசிகா

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (10:35 IST)
காதலன் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபகாலமாக சீரியல் நடிகைகள், நடிகர்கள், துணை நடிகைகள், நடிகர்களின் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போவதும், காதல் தோல்விகளுமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
 
இந்நிலையில் சீரியல்கள் மற்றும் சில படங்களில் நடித்திருக்கும் துணை நடிகை யாசிகா(21) என்பவர் தனது காதலர் அரவிந்துடன் சென்னை வடபழனியில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கடந்த 4 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்த இவர்களுக்குள் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
 
இதனால் அரவிந்த் யாசிகாவை விட்டு பிரிந்து சென்றார். இதனால் மன வருத்தத்தில் இருந்த யாசிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். யாசிகா இறப்பதற்கு முன்னர் தன்னை ஏமாற்றிய அரவிந்துக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென, தனது தாயாருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த மரணத்தில் வேரேதும் மர்மம் உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்தடுத்து வந்த மரணங்கள்… காந்தாரா ரிலீஸில் மாற்றமா?- படக்குழு வெளியிட்ட அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments