Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைதானத்தில் ரகளையில் ஈடுபட்ட டிவி நடிகை: போலீஸாரின் அதிரடி நடவடிக்கை!!!

மைதானத்தில் ரகளையில் ஈடுபட்ட டிவி நடிகை: போலீஸாரின் அதிரடி நடவடிக்கை!!!
, திங்கள், 22 ஏப்ரல் 2019 (13:56 IST)
தெலங்கானாவில் ஐபிஎல் போட்டியை காண சென்ற டிவி நடிகை மைதானத்தில் ரசிகர்களை மேட்ச் பார்க்க விடாமல் தொந்தரவு செய்துள்ளார்.
 
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
 
இந்த போட்டியை காண தெலுங்கு டிவி நடிகை பிரசாந்தி தனது தோழிகள் 5 பேருடன் மைதானத்திற்கு சென்றுள்ளார். ஆனால் பிரசாந்தி தனது தோழிகளுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிக்கொண்டும், சத்தம்போட்டுக்கொண்டும் சக பார்வையாளர்களை மேட்ச் பார்க்கவிடாமல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் கடுப்பான நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளிக்க, போலீஸார் பிரசாந்தி உட்பட அவரது தோழிகள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் பரிசு அவங்களுக்கு தான் கொடுத்திருக்கவேண்டும்! விஜய் டிவி-யை வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்!