Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவறான நபரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் வாய்ப்புகளை இழந்தேன்… அஞ்சலி அதிரடி கருத்து!

தவறான நபரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் வாய்ப்புகளை இழந்தேன்… அஞ்சலி அதிரடி கருத்து!
, வெள்ளி, 30 டிசம்பர் 2022 (16:26 IST)
நடிகை அஞ்சலில் நடிப்பில் சமீபத்தில் நடித்த தி பால் என்ற வெப் தொடர் வெளியாகி கவனம் பெற்றது.

தமிழில் இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார் அஞ்சலி. அந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அஞ்சலிக்கு நல்ல நடிகை என்று பெயர் கிடைத்தது.

அதன் பின்னர் அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போது, வத்திக்குச்சி என ஏராளமான படங்களில் நடித்த அவர் , கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் படங்களில் நடிக்கவில்லை. இப்போது மீண்டும் இயக்குனர் ராம் இயக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் மூலம் மறுபடியும் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் “ஒருவருடன் ஏற்பட்ட உறவால் என்னுடைய சினிமா வாழ்க்கையில் என்னால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. அந்த உறவை விட கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் நல்லது. அதுபோன்ற உறவு தவறானது” எனக் கூறியுள்ளார். ஆனால் தன்னைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர் யார் என்பதை சொல்லவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சின்னஞ்சிறுசுங்க தொல்லை தாங்கமுடியல - துபாயில் கொஞ்சி விளையாடும் ஆலியா சஞ்சீவ்!