Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள் - பிக்பாஸ் வீட்டில் சுஜா புலம்பல்

எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள் - பிக்பாஸ் வீட்டில் சுஜா புலம்பல்
, வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (14:53 IST)
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை சுஜா, வீட்டில் உள்ள மற்றவர்கள் தன்னிடம் பேசுவதை தவிர்க்கிறார்கள் என புலம்பி வருகிறார்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விஜய் தொலைக்காட்சி ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸிடம் தனியறையில் புலம்பும் நடிகை சுஜா “என்னிடம் யாரும் சரியாக பேசுவதில்லை. எல்லோரும் என்னை தவிர்க்கிறார்கள். தனிமையாக உணர்கிறேன்” என சோகமாக பேசுகிறார்.
 
ஏற்கனவே, தன்னுடைய குடும்பம், சினிமாவில் சந்தித்த பிரச்சனை பற்றி பிக்பாஸிடம் தனியறையில் புலம்பி அழுது வடிந்தார் சுஜா வருணி. ஓவியாவை காப்பி அடிக்க முயலும் அவர், தற்போது மீண்டும் அதேபோல் ஒரு ஸ்டெண்டை கையில் எடுத்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் விளையாட்டாக சில செய்கைகளில் ஈடுபட்டதற்கு, அவர்களிம் கோபமாக பேசினார் சுஜா. அவர்கள் விளக்கம் அளித்த பின்பும் மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுப்பி எரிச்சலை உண்டாக்கினார். எனவே, அவரிடம் பேசுவதை எல்லோரும் தவிர்த்து வருவதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘புலி’யைவிட மொக்கையா ‘விவேகம்?’