Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணா சாலையில் திடீரென நடிகர்கள் கூடியது ஏன்?

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (14:45 IST)
தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளுக்காக நடத்திய வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நிறைவடைந்து நேற்று முதல் படப்பிடிப்புகளும் புதிய படங்களின் வெளியீடுகளும் தொடங்கியுள்ளது.
 
இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில்  நாசர்,  விஷால்,  கார்த்தி, சிம்பு, அரவிந்த்சாமி, சுகாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இதில் படத்தயாரிப்பில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைப்பது எப்படி என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைகளுக்கு அனைத்து நடிகர்களும் ஒத்துழைப்பு தர உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
இந்த கூட்டத்தின் போது எதிரும் புதிருமாக இருந்து சிம்பு மற்றும் விஷால் அருகருகே ஆலோசனை செய்ததுடன் சிம்பு தோள்மீது விஷால் நட்புடன் கைபோட்டுள்ளவாறு வெளிவந்துள்ள புகைப்படம், தமிழ் சினிமா ஆரோக்கிய பாதையில் ஒற்றுமையுடன் சென்று கொண்டிருப்பதை நிரூபித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments