Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை அண்ணா சாலையில் திடீரென நடிகர்கள் கூடியது ஏன்?

சென்னை அண்ணா சாலையில் திடீரென நடிகர்கள் கூடியது ஏன்?
, சனி, 21 ஏப்ரல் 2018 (14:45 IST)
தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு கோரிக்கைகளுக்காக நடத்திய வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நிறைவடைந்து நேற்று முதல் படப்பிடிப்புகளும் புதிய படங்களின் வெளியீடுகளும் தொடங்கியுள்ளது.
 
இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில்  நாசர்,  விஷால்,  கார்த்தி, சிம்பு, அரவிந்த்சாமி, சுகாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
webdunia
இதில் படத்தயாரிப்பில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைப்பது எப்படி என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைகளுக்கு அனைத்து நடிகர்களும் ஒத்துழைப்பு தர உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
இந்த கூட்டத்தின் போது எதிரும் புதிருமாக இருந்து சிம்பு மற்றும் விஷால் அருகருகே ஆலோசனை செய்ததுடன் சிம்பு தோள்மீது விஷால் நட்புடன் கைபோட்டுள்ளவாறு வெளிவந்துள்ள புகைப்படம், தமிழ் சினிமா ஆரோக்கிய பாதையில் ஒற்றுமையுடன் சென்று கொண்டிருப்பதை நிரூபித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல மலையாள நடிகருக்கு ஜோடியாகும் நிவேதா பெத்துராஜ்