Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் கனமழை : நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:30 IST)
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

 
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. பார்க்கும் இடமெங்கும் வெள்ளமாக காட்சி அளிக்கிறது. பலரது வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் சீற்றத்துக்கு இதுவரை 73 பேர் பலியாகி விட்டனர்.
 
இந்நிலையில், பலரும் கேரள மாநிலத்திற்கு நிதியுதவி செய்து வருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து ரூ.25 லட்சத்தை நிதியாக கொடுத்திருந்தனர். அதேபோல், நடிகர் கமல், நடிகை ரோஹிணி மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். மேலும், கேரள மாநில மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என அவரின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments