Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பணம் செய்த சிவகார்த்திகேயன்: நெகிழ்ச்சியான டுவீட்

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (07:08 IST)
கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பணம் செய்த சிவகார்த்திகேயன்
தமிழக அரசு சமீபத்தில் கலைமாமணி விருதை அறிவித்தது என்பதும் சிவகார்த்திகேயன் யோகிபாபு சரோஜாதேவி ராமராஜன் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
மேலும் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலைமாமணி விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் தனது கையால் விருதை வழங்கினார். இந்த நிலையில் தமிழக முதல்வரிடம் இருந்து கலைமாமணி விருதைப் பெற்ற சிவகார்த்திகேயன் தனது தாயாருக்கு அந்த விருதை சமர்ப்பணம் செய்து அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார் 
 
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் கலைமாமணி விருது குறித்து கூறியதாவது:
 
சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments