Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோல்டன் நேரத்தை நாங்கள் மிஸ் செய்துவிட்டோம்… நடிகர் ராஜேஷ் மறைவு குறித்து அவரது தம்பி ஆதங்கம்!

Advertiesment
Actor Rajesh passes away

vinoth

, வெள்ளி, 30 மே 2025 (08:55 IST)
தமிழ் சினிமாவில் 70, 80 களில்புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் ராஜேஷ். 1974ல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அவள் ஒரு தொடர்கதை’ மூலம் அறிமுகமான நடிகர் ராஜேஷ், கன்னிப்பருவத்திலே, அந்த 7 நாட்கள், தனிகாட்டு ராஜா, பயணங்கள் முடிவதில்லை, தாய் வீடு, சிறை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அழைத்து செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவரது திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆரோக்யமாகவும் உற்சாகமாகவும் காணப்படும் ராஜேஷின் திடீர் மரணம் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட முடியாததாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ராஜேஷின் சகோதரர், அண்ணனின் மரணம் பற்றி பேசும் போது “என் அண்ணனுக்கு நெஞ்சுவலி இல்லை. இரவுத் தூக்கம் இல்லை என்றும் மூச்சுவிட சிரமமாக உள்ளது என்றும் சொன்னார். நாங்கள் மருத்துவமனைக்கு செல்லலாம் என்ற போது அவரே கருவிகள் வைத்து பரிசோதித்துப் பார்த்தார். சித்த மருத்துவர் என்று சொல்லி வந்த ஒருவர் இரண்டு மணிநேரம் கதை பேசி கோல்டன் நேரத்தை வீணாக்கிவிட்டார். அப்படி இல்லாமல் உடனே மருத்துவமனைக்கு சென்றிருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம்.  இரண்டு மணிநேரம் கழித்துதான் மருத்துவமனைக்கு சென்றோம். அது எங்களுடைய தவறு.” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“யூனிவர்ஸ்லாம் எனக்கு சரிவராது… அவருதான் அதுக்கு சரியான ஆளு…” இயக்குனர் மணிரத்னம் கருத்து!