சென்னை டூ கோத்தகிரி : நடிகர் ராதாரவி தனிமைப்படுத்தப்பட்டார்!

Webdunia
புதன், 13 மே 2020 (12:01 IST)
கோத்தகிரி சென்ற நடிகர் ராதாரவி அவரது குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் ராதாரவி. சமீபத்தில் திமுகவிலிருந்து விலகிய இவர் தமிழக பாஜகவில் இணைந்தார். கடந்த 10ம் தேதியன்று சென்னையிலிருந்து கோத்தகிரியில் உள்ள தனது வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளார் ராதாரவி.

இதுகுறித்து அறிந்த கோத்தகிரி சுகாதார அதிகாரிகள் ராதாரவியின் பங்களாவுக்கு சென்று விசாரித்ததில் அவர் உரிய அனுமதி பெற்ற பிறகே சென்னையிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. பிறகு அவரது பங்களாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பிறகு அவர்கள் பங்களாவில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் திரைக்கதையை மாற்றும் பிரசாந்த் நீல்.. பின்னணி என்ன?

என் தயாரிப்பாளர்கள் ப்ளூ சட்ட மாறனைவிடக் கண்டிப்பானவர்கள்… கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி அப்டேட்!

ஹீரோவாக அறிமுகமாகும் தேவி ஸ்ரீ பிரசாத்…. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ்!

அஜித்துடன் மீண்டும் நடிக்க ஆசை… பிரபல பாலிவுட் நடிகர் விருப்பம்!

‘அரசன்’ ப்ரோமோவைக் கொண்டாடித் தள்ளிய ரசிகர்கள்… 20 மில்லியன் பார்வைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments