Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிலோ ரவாவில்… கொரோனா காலத்தில் பார்த்திபன் செய்தது இதுதான்!

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (08:43 IST)
நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பை எழுதி அதை அமேசானில் வெளியிட்டுள்ளார்.

எப்போதும் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்பவர் நடிகர் பார்த்திபன். அது படங்களின் கதையில் இருந்து அவர் கொடுக்கும் அழைப்பிதழ்கள் வரை தொடரும். இந்நிலையில் இப்போது ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கியிருக்கும் அவர் ஒரு கவிதைத் தொகுப்பை எழுதி அமேசான் கிண்டிலில் வெளியிட்டுள்ளார்.

இதில் ஒரு கவிதையில்
‘நான் ஒரு கிலோ ரவாவில்
144,32,43,538 துகள்களை எண்ணினேன்….’ என பார்த்திபனின் குசும்பு மின்னுகிறது.

இந்த கவிதைத் தொகுப்பு பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பார்த்திபன்’ எனக்கு இந்த ஊரடங்கு சிறையாகத் தெரியவில்லை. நான் ஏற்கனவே இப்படி ஒரு வாழ்க்கையைதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இப்போது நான் தவற விடுகிற ஒரே விஷயம் ஜிம்முக்கு செல்வதைத்தான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments