Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த காரணத்தால் தான் அகில்-ஸ்ரேயா திருமணம் நின்றதா?

இந்த காரணத்தால் தான் அகில்-ஸ்ரேயா திருமணம் நின்றதா?
, வியாழன், 23 பிப்ரவரி 2017 (10:15 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜூனா. இவரது இளைய மகன் அகிலுக்கு, முன்னணி ஆடை  வடிவமைப்பாளர் ஸ்ரேயா பூபால் உடன் கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.

 
இந்நிலையில் அகில், ஸ்ரேயா  திருமணம் இத்தாலியில் நடத்தவும் முடிவு செய்து, திருமண அழைப்பிதழ் நியோகிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென அகில் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரேயா  குடும்பத்தினர் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவசர தகவல் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். 
 
எனினும், இதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. திருமணமும் ரத்து செய்யப்படுகிறதா அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் அகில், ஸ்ரேயா பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்  தற்போது அவர்களுக்கு இடையே ஏதோ பிரச்சனையால் அவர்களிடையே மனஸ்தாபம் இருந்துள்ளது.
 
திருமண ஏற்பாடுகள் செய்வதில் நாகர்ஜுனா, ஸ்ரேயா குடும்பத்தார் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். இதனால் ஏற்கனவே  அகில், ஸ்ரேயா இடையே இருந்த பிரச்சனை பெரிதாகி பிரிந்துவிட்டார்களாம். அகில், ஸ்ரேயா காதலை முறித்துக் கொள்ள  திருமணம் நின்றுவிட்டது. இந்த திருமணம் நின்றுள்ளது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு பாவனா கொடுமை போல் நடந்திருந்தால் கொலை செய்திருப்பேன். ராகுல் ப்ரித்திசிங்