Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கு பாவனா கொடுமை போல் நடந்திருந்தால் கொலை செய்திருப்பேன். ராகுல் ப்ரித்திசிங்

எனக்கு பாவனா கொடுமை போல் நடந்திருந்தால் கொலை செய்திருப்பேன். ராகுல் ப்ரித்திசிங்
, வியாழன், 23 பிப்ரவரி 2017 (06:17 IST)
சமீபத்தில் நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தென்னிந்திய திரையுலகையே உலுக்கியது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து நான்கு குற்றவாளிகளை இதுவரை கைது செய்துள்ளனர்.




இந்த கொடூர சம்பவத்திற்கு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்ரனர். இந்நிலையில் பிரபல நடிகை ராகுல் ப்ரித்தி சிங் இதுகுறித்து கூறியதாவது:

நடிகை பாவனாவுக்கு ஓடும் காரில் நடந்துள்ள பாலியல் கொடுமையை கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இது ஒரு வெட்கம் கெட்ட செயல். பெண்மையின் புனிதத்தை போற்றி மகளிர் தினம், அன்னையர் தினம் என்றெல்லாம் நிறைய விழாக்கள் எடுக்கப்படுகின்றன. இன்னொரு புறம் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற பாலியல் வக்கிரமங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன.

பெண்கள் மீது பாலியல் வக்கிரமங்களை ஏவுகிறவர்கள் மனிதராகவே இருக்க முடியாது. நடிகை பாவனா இடத்தில் நான் இருந்து எனக்கு பாலியல் பலாத்கார கொடுமைகள் நடந்து இருந்தால் அந்த செக்ஸ் வெறியர்களை சும்மா விட்டு இருக்க மாட்டேன். அவர்களை கொலை செய்து இருப்பேன்' என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலி' ரஜினி பாதையில் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'