Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பரியேறும் பெருமாள் படத்தின் அந்த காட்சி மாரி செல்வராஜ் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமா?

பரியேறும் பெருமாள் படத்தின் அந்த காட்சி மாரி செல்வராஜ் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமா?
, வியாழன், 29 ஜூன் 2023 (14:48 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தை  இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டியுள்ளார். இப்படத்தில்  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
 
இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், இன்று வெளியாகி இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் தான் இயக்கும் ஒவ்வொரு படத்தையும் புது கோணத்தில் காட்டி மக்களை வியக்க செய்திடுவார்.  அது அனைத்தும், அவர் வாழ்வில் அனுபவித்த சம்பவம் போல் சித்தரித்திருப்பார். 
 
அப்படித்தான்  "பரியேறும் பெருமாள்" படத்தில், கதாநாயகன் கதிரை கதாநாயகியின் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து அடித்து கதிர் மீது சிறுநீர் கழிப்பது போல் காட்சி இருக்கும். அந்த காட்சியை படமாக்கும்போது இயக்குனர் ஒரு மிருகம் போல அவ்வளவு கோபத்தோடு காணப்பட்டாராம். ஏன் இவ்வளவு கோபம் கேட்டதற்கு இது என் வாழ்வில் நிஜமாகவே நடந்த சம்பவம், நான் என் காதலியின் வீட்டுக்கு சென்றபோது இப்படி தான் அவமானப்படுத்தப்பட்டேன் என கூறினாராம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''வெற்றி உன்னை சூடிக்கொள்ளட்டும்''- மாரி செல்வராஜை பாராட்டிய பா.ரஞ்சித்