ஏன் எல்லா மேடையிலயும் பருத்திவீரன் டயலாக்க பேசுறீங்க?... அமீருக்கு ஆதரவாக களமிறங்கிய கஞ்சா கருப்பு!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (07:56 IST)
கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படத்தின் போது இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பற்றி காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா “பருத்தி வீரன் பட தயாரிப்பின் போது அமீர் பொய்க் கணக்கு காட்டி பணத்தை திருடினார்” எனக் கூறினார்.

அதையடுத்து அந்த படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, நடிகர் பொன்வண்ணன், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் இயக்குனர்  ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் ஞானவேல் ராஜா சமூகவலைதளங்களில் கடுமையாக எதிர்மறை விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகர் கஞ்சா கருப்பு அமீருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் அளித்துள்ள நேர்காணலில் “பருத்திவீரன் இல்லன்னா இன்னைக்கு கார்த்தி இல்ல… கார்த்திக்கு இன்னைக்கு சம்பளம் 50 கோடி. அதுக்கு யாரு காரணம் அமீர் அண்ணன்தானே.. சிவக்குமார் ஐயா ஞானவேல் ராஜாவ கூப்டு நீ பேசுறது தப்புன்னு சொல்லணும். அமீருக்கு கொடுக்க வேண்டியத கொடுத்து செட்டில் பண்ணுன்னு சொல்லணும். எம் ஜி ஆர், ரஜினி ரெண்டு பேரும் அவங்க குருநாதர்களுக்கு எவ்ளோ மரியாத கொடுத்தாங்க. இப்பவும் எங்க போனாலும் கார்த்தி ஸ்டேஜ்ல பருத்திவீரன் வசனத்ததான பேசி கைதட்டல் வாங்கிறாரு” என ஆவேசமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு ஆதரவாக இயக்குனரும் ஹீரோவும் பேசவில்லை: நடிகை கெளரி கிஷன் ஆதங்கம்..!

மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி.. அனுஷ்கா ஷர்மாவுக்கு அடித்த ஜாக்பாட்..!

இயக்குனர் ராஜ் உடன் கட்டிப்பிடித்த போட்டோவை வெளியிட்ட சமந்தா.. காதல் உறுதியா?

பிக்பாஸ் தமிழ் 9: அதிரடி டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் வெளியேறுபவர்கள் யார் யார்?

Thalaivar 173: சுந்தர்.சிக்கு டபுள் சேலரி!.. ரஜினி படத்தின் மொத்த பட்ஜெட் இவ்வளவு கோடியா?..

அடுத்த கட்டுரையில்
Show comments