Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நல்ல மனிதரை இழந்து விட்டோம்: சோகத்தில் தனுஷ்!!

நல்ல மனிதரை இழந்து விட்டோம்: சோகத்தில் தனுஷ்!!
, புதன், 29 ஏப்ரல் 2020 (16:06 IST)
நடிகர் தனுஷ் டிவிட்டர் பக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான் (வயது 53) புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இவர் சமீபத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பினார்.
 
இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ராஜஸ்தானில் அவரது தாய் காலமானார். ஊரடங்கு உத்தரவு காரணத்தால் தாயின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியாத இர்ஃபான் கான் வீடியோ மூலம் தனது தாயின் இறுதிச்சடங்கை கண்ணீருடன் பார்த்த வீடியோ வெளிவந்து அனைவரையும் கலங்க வைத்தது. 
webdunia
இந்நிலையில் இன்று இர்ஃபான் கான் மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரது இறப்பு செய்தியை ஏற்றுகொள்ள முடியாமல் ரசிகர்கள் மனவேதனை தெரிவித்து வருகின்றனர். இவரது இறப்பிற்கு தொடர்ந்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் டிவிட்டர் பக்கத்தில் இவர் குறித்து பதிவிட்டுள்ளார். 
 
அவர் பதிவிட்டுள்ளதாவது, இர்பான் கானின் இறப்புசெய்தி கேட்டு என் மனம் உடைந்தது. அவர் திறமையான கலைஞர். நல்ல மனிதரை இழந்து விட்டோம். எப்பொழுதும் அவரது கனிவான வார்த்தைகளை மறக்கமாட்டேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் படம் மீண்டும் தள்ளி வைப்பு! எப்போது ரிலிஸ் தெரியுமா?