Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு வராமலேயே டப்பிங் முடித்த தனுஷ்… விரைவில் திருச்சிற்றம்பலம் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (09:45 IST)
நடிகர் தனுஷ் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் மற்றும் புதுச்சேரியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை இப்போது தனுஷ் ஹைதராபாத்தில் இருந்தே முடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தனுஷ் சென்னைக்கு வராததால் அங்கிருந்தபடியே டப்பிங் பணிகளை முடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகும் பாடலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் எஸ்பிபி நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்.. மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை..!

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments