Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் தொல்லை செய்த காமுகர்கள் - சபதம் செய்த பாவனா

பாலியல் தொல்லை செய்த காமுகர்கள் - சபதம் செய்த பாவனா
, புதன், 22 பிப்ரவரி 2017 (17:00 IST)
சமீபத்தில் நடிகை பாவனா மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான அதிர்ச்சி சம்பவம் தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


 

 
ஆனால் இந்த அதிர்ச்சியில் இருந்து ஒரே வாரத்தில் மீண்டு தற்போது அவர் இயல்பு நிலைக்கு அவர் திரும்பிவிட்டதாக செய்தி வெளியானது. மேலும், ஜினு ஆபிரஹாம் இயக்கும் 'ஆதம்' என்ற படத்தில் நடிகர் பிருதிவிராஜுக்கு ஜோடியாக அவர் நடிக்க தயாராகிவிட்டதாகவும் கூறப்பட்டது.. 
 
ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை அவர் சினிமாவில் நடிக்க மறுத்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இதுபற்றி நடிகர் பிரித்திவிராஜ் கூறும் போது “ பாவனாவும், நானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுள்ளோம். ஆனால், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் தண்டிக்கப்படும் வரை நான் கேமரா முன்பு வர மாட்டேன் என பாவனா கூறிவிட்டார்” எனத் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி 2 - ஷாருக்கான் நடிக்கவில்லை