Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு பிடிக்க நடிக்கிறார்கள்…முன்னது வெறி... பின்னது வீரம் ! கமல்ஹாசன் டுவீட்

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (17:02 IST)
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.

அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே நிச்சயம் தனது கட்சி வெல்லும் என எதிர்ப்பார்ப்புடன் கமல் உள்ளார்.

நேற்று மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணிக்குப் பேசிவருவதாக வெளியான தகவலை கமல் மறுத்திருந்தார்.

தமிழகத்தில் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளா அவர், அதில்,
எதைச் செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள். எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்கத் துணிகிறார்கள். முன்னது வெறி. பின்னது வீரம். நீங்கள் யார் பக்கம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ரஜினியைச் சந்தித்து ஏன் அரசியலுக்கு வரவில்லை எனக் கேள்வி கேட்பதுடன் தனது கட்சிக்கு ஆதரவு வேண்டுமெனக் கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments