Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வெளியாகவுள்ள இரண்டு படங்கள் திடீர் ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (22:22 IST)
கடந்த சில வாரங்களாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்த நிலையில் இந்த வார வெள்ளி மட்டுமே சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாக ஒரு வாய்ப்பாக இருந்தது. எனவே நாளைய வெள்ளியன்று ஆண் தேவதை, நட்புன்னா என்னன்னு தெரியுமா, மனுசங்கடா, கூத்தன், களவாணி சிறுக்கி, மூன்றாவது கண், அமாவாசை ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' என்ற திரைப்படம் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் நாளை வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் ஆண் தேவதை' பட தயாரிப்பு பணிகளுக்காக பெற்ற கடன் தொகையில் ரூ22 லட்சத்தை தயாரிப்பாளர் திருப்பி தராததால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த படத்தை நாளை திரையிட கூடாது என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இந்த இரண்டு படங்களும் நாளை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்த வாரம் ஆயுதபூஜை படங்கள் அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

பிஸ்னஸை தொடங்கிய சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு… பிள்ளையார் சுழி போட்ட பிரபல ஓடிடி!

தனி ஒருவன் 2 படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் நடிகரோடு இணையும் மோகன் ராஜா!

விமல் கருணாஸ் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ டிரெய்லர் எப்படி?

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments