Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இசைஞானி பிறந்த நாளில் சிம்பு செய்யும் மரியாதை

Advertiesment
, திங்கள், 29 மே 2017 (23:05 IST)
மூன்று வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஜூன் 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த நாள் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.



 


'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தாலும், இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளாராம். ரோட்டுல வண்டி ஓடுது என்ற இந்த பாடல் ஆன்மீக வகை பாடல் என்றும் இந்த பாடலை இசைஞானி பாடினால்தான் நன்றாக இருக்கும் என்றும் ஐடியா கொடுத்தவரே சிம்புதானாம்

சிம்புவின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த பாடலை இளையராஜா பாடி கொடுத்துள்ளார். இந்த பாடலை வரும் ஜூன் 2ஆம் தேதி இசைஞானி அவர்களின் பிறந்த நாளில் வெளியிட்டே தீரவேண்டும் என்று சிம்பு இயக்குனர் தரப்பில் நெருக்குதல் கொடுத்ததால் இந்த பாடல் கிட்டத்தட்ட இப்போது ரெடியாகிவிட்டதாம். சிம்பு விரும்பியபடியே ஜூன் 2, இசைஞானியின் பிறந்த நாளில் இந்த படத்தின் முதல் பாடல் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ், சிம்புவுடன் மோத முடிவெடுத்த செல்வராகவன்